மக்களவை தேர்தல் வருகிற வியாழக்கிழமை நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின .
கடந்த சில நாட்களில் இருந்தே வருமான வரித்துறையினரிடம் அதிகம் சிக்கும் தொகுதிகளில் வேலூர் தொகுதியும் அமைந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.இதை காரணம் காட்டி வேலூரில் தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக மீடியாவில் தகவல் வெளியாகின.ஆனால் வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் சேய்பாலி ஷரண் தெரிவித்துள்ளார் .