23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகா் விஜய் சேதுபதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், நடிகா் ரோபோ ஷங்கா் ரூ.1 லட்சமும், கோமதியிடம் வழங்கியுள்ளனர். திருச்சியில் உள்ள தனது ரசிகா்கள் மூலமாக இந்த ஊக்கத் தொகையை விஜய் சேதுபதி வழங்கி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.