தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக அவரது மகன் விஜய பிரபாகரன் மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய பிரபாகரன் விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அவரது உடல் நிலை குறித்து சிலர் அவதூறு பரப்புவதாக கண் கலங்கினார் . உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் கண்ணீர் சிந்தவே, தொண்டர்கள் சமாதானப்படுத்தினர்.பின்னர் தன்னை தேத்திக் கொண்ட அவர், இது ஆனந்தக் கண்ணீர் என்று கூறினார். தேவை இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.