Mnadu News

கார்கில் போர் வீரரின் கதையை இயக்கும் விஷ்ணு வர்தன்

குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இவர் நடிகர் அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என இரண்டு மெகாஹிட் படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘யட்சன்’.

இந்நிலையில், விஷ்ணு வர்தன் இயக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்கில் போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்.

இந்த படத்திற்கு ‘ஷெர்ஷா’ என தலைப்பிடப்பட்டுள்ளது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends