Mnadu News

சூலூரில் நடைபயணமாக மக்களைச் சந்தித்து முக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமியை  ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நடைப்பயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையில் திரண்டிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் முக ஸ்டாலினுடன் செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, சூலூர் தொகுதிக்குட்பட்ட பட்டணம்புதூர் பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில்  முக. ஸ்டாலின் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலினுடன் சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends