Mnadu News

காயத்துடன் ரத்தம் வடிய விளையாடிய வாட்சன் …

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் , மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் 80 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இந்நிலையில், வாட்சன் ஃபீல்டிங் செய்யும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, 6 தையல் போடப்பட்டதாகவும், அதை மீறி ரத்தம் வடிய வாட்சன் விளையாடியதாக சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தன் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடியதற்காக வாட்சனை சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share this post with your friends