Mnadu News

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த நலத்திட்டங்கள்

சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலவர் பழனிச்சாமி தமிழகத்துக்கான நலத்திட்டங்களை அறிவித்தார் .சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க 9 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார் .

சென்னை பெருங்குளத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலை பணி தொடங்கியுள்ளது என்றும் பொதுப்பணித்துறையில் ரூபாய் 2100 கோடி மதிப்புள்ள பணிகள் ,நெடுஞ்சாலை ,துறைமுகம் துறையில் ரூபாய் 2082 கோடியில் பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார் .

Share this post with your friends