Mnadu News

நீதிபதி முன் ஆஜராக ராஜகோபால் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டபோது,முதுகு வலிக்கிறது என குமுறல்…

ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்ஸில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தனனர்.ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் .இதனையடுத்து ,சாந்தகுமார் கொலை வழக்கில் இன்று ஆம்புலன்சில் வந்து ஆஜரானார்.நீதிபதி முன்பு ஆஜராகும் பொழுது ராஜகோபால் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்கையில் ,ஐயோ வலிக்குது,முதுகு வலிக்குது என குரல் எழுப்பியபடி கொண்டு செல்லப்பட்டார் . நீதிமன்றத்தில் ஆஜரான அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சாந்தகுமார் கொலை வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை பெற்றவர் ஜனார்த்தனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends