Mnadu News

பனி மனிதனின் காலடித்தடமா இருக்கக்கூடுமா…இந்திய ராணுவம் வெளியிட்ட ட்விட்

இமயமலைக்காடுகளில் வசிப்பதாக நம்பும் அளவிற்கு பனி மனிதனின் காலடித்தடம் என்று இந்திய ராணுவம் புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்துள்ளது.மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட விலங்கினமாக குறிப்பிடப்படும் பனி மனிதன் பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் , இந்திய ராணுவத்தின் ஒரு ட்வீட்டால் அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளது . “மாகலு – பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த 9-ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்த போது, ’ஏதியின் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்ட கால்தடம் கிடைத்துள்ளது” என்று புகைப்படத்துடன் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மாகலு – பரூண் தேசிய பூங்கா அருகே இதேபோன்ற பனி மனிதர்கள் பார்க்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சராசரி மனிதனை விட அதிக உயரம் கொண்ட இந்த பனி மனிதன் இமயமலை தவிர அமெரிக்கா, சைபீரியா ஆகிய பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படுகிறது.

Share this post with your friends