Mnadu News

இந்தியாவின் no.1 மொபைல் நிறுவனமான ஜியோமி நிறுவனம், ஏழாவது உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்கவுள்ளது.!

இந்தியாவின் no.1 மொபைல் நிறுவனமான ஜியோமி நிறுவனம், உலகில் தற்போது தனது ஏழாவது உற்பத்தி ஆலையை  ஃபிளெக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்த நிறுவனம் அமைய மொத்தம் சுமார் ஒரு மில்லியன் (22 ஏக்கர்) சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலையை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜியோமி நிறுவனம் தொடங்கவுள்ளது.இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் வெளியிட்டுள்ளார்.

“என்னை மகிழ்ச்சியடை செய்வது எதுவெனில், இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதில், பெண்­களின் பங்கு, 95 சத­வீ­த­மாக உள்ளது.” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends