Mnadu News

மூதாட்டியிடம் செயின் பறித்த இளைஞர்கள்

சமீபகாலத்தில் செயின் பறிப்பு சம்பவம் அதிகமாக அரேங்கேரி வருகிறது.அதிலும் கல்லூரி மாணவர்களே இந்த செயின் பறிப்பு சம்பவத்திலே ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை விளாங்குடி டென்சிகாலனியைச் சேர்ந்தவர் நாச்சியார் என்ற மூதாட்டி. இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுகொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.தலைக்கவசம் அணியாமல் வந்த அந்த இரு இளைஞர்களின் முகங்களும் சி.சி.டி.வி. காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளன. அதனைக் கொண்டு அந்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Share this post with your friends