Mnadu News

இந்தியா

‘எக்ஸ்’ தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரண்டு பதிவுகளையும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் இரண்டு பதிவுகளை நீக்கக் கோரி, ஏப்ரல் 2 மற்றும் 3-ஆம் …

‘எக்ஸ்’ தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு Read More »

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது – ராஜ்நாத் சிங்

இந்து கடவுள்களை அவமதிப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று பிற்பகல் நடந்தது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த …

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது – ராஜ்நாத் சிங் Read More »

நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை – அமித்ஷா பாராட்டு

சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுனட்ரில் …

நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை – அமித்ஷா பாராட்டு Read More »

கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நாளை வரை நீடிக்கும் என ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை …

கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! Read More »

“பாஜக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” – மல்லிகார்ஜூன கார்கே

புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தெரிவித்த அவர், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலைநாட்ட தேர்தல் மிக முக்கியமானது என இந்திய மக்களும் இதை உணரத் தொடங்கியுள்ளனர். ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பை மதிக்காதோரை இந்த அமைப்புகளின் தலைவராக்குகிறார்கள். ஒத்துழைப்பு தராதோரை அழுத்தம் தந்து ராஜினாமா செய்ய …

“பாஜக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” – மல்லிகார்ஜூன கார்கே Read More »

நடிகர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு – இருவர் கைது

நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாகிச்சூடு நிகழ்த்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு முறை சுட்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் …

நடிகர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு – இருவர் கைது Read More »

பாஜக தேர்தல் அறிக்கை – காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடினார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி …

பாஜக தேர்தல் அறிக்கை – காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்! Read More »

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மோடி கேரண்டி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், பிரதமர் மோடி பா.ஜ.க. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. …

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக Read More »

“தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்” – ப.சிதம்பரம்

மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் , அனைத்து மாநிலங்கள் குறித்தும் என்னால் உதியாக கூற முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளார். கேரளாவில் 20 தொகுதிகளையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பகிர்ந்து கொள்ளும். அங்கு பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது. …

“தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்” – ப.சிதம்பரம் Read More »

“கொரோனா காலத்தில் மக்களை பாஜக துன்புறுத்தியது” – ராகுல்காந்தி

பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மராட்டியத்தின் பந்தாரா மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது தெரிவித்த அவர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் வெறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களும், கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.யை செலுத்தும் நிலை உள்ளது என்று குற்றம் சாட்டிய …

“கொரோனா காலத்தில் மக்களை பாஜக துன்புறுத்தியது” – ராகுல்காந்தி Read More »