Mnadu News

TOP TAMIL NEWS

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் 2குழந்தைகளின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டின் உள்பகுதியில் 2 குழந்தைகள் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மண், பாறை சரிவால் ஏற்பட்ட …

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு Read More »

மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு மாநிலத்தில் ஆங்காங்கே பெய்கின்ற மழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும், சில மாவட்டப் பகுதிகளில் பெய்த அதி கன மழையால் விளைநிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் …

மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன் Read More »

“மதுரவாயல் உலக சுற்றுலாத் தலமாக மாறும்”

மதுரவாயல் உலக சுற்றுலா தலமாக மாறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொமண்டு உரையாற்றிய மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , 2007 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை தொடங்கினார். அதிமுக ஆட்சியில் தொடரபடமால் இருந்து வந்த நிலயில் …

“மதுரவாயல் உலக சுற்றுலாத் தலமாக மாறும்” Read More »

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 47 பேர் உயிரிழப்பு

கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர். கிழக்கு லெபனானின் கவர்னரேட் பால்பெக்-ஹெர்மெல் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர் என்று ஆளுநர் பச்சீர் கோடர் தெரிவித்துள்ளார். கவர்னரேட் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போனவர்களை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக …

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 47 பேர் உயிரிழப்பு Read More »

பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் …

பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா திறப்பு Read More »

ராமேஸ்வரத்தில் 44 செ.மீ. அளவுக்கு கொட்டிய மழை

 தமிழகத்தில் அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 438 மில்லி மீட்டர் (44 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் 438 மில்லி மீட்டர் …

ராமேஸ்வரத்தில் 44 செ.மீ. அளவுக்கு கொட்டிய மழை Read More »

பேருந்து லாரி மீது மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசம், அலிகார் அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் டில்லியில் இருந்து அஸாம்கரை நோக்கி, பயணிகளை ஏற்றிக் கொண்டு டபுள் டெக்கர் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில், 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட …

பேருந்து லாரி மீது மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு Read More »

டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று வரவேற்றனர்.இந்நிலையில் இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது ; ஜனாதிபதி மாளிகையிக்கு வருகை புரிந்த அதிபர் முய்சு, ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்றும் பிரதமர் மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் …

டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை Read More »

விமான சாகசத்தில் 5 உயிரிழப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண வந்த லட்சக்கணக்கான மக்களில் 5 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாகவும் ஆனால் அதை யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது என்றும் கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கம் …

விமான சாகசத்தில் 5 உயிரிழப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் Read More »

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும். அதன்படி 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் முமேத்தாவுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.