Mnadu News

TOP TAMIL NEWS

விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம் – சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், …

விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம் – சென்னை உயர்நீதிமன்றம் Read More »

ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

லக்னோ , உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் …

ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் Read More »

முதலில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லட்டும் – ஜெய்ராம் ரமேஷ்

இந்தியாவின் சார்பில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது …

முதலில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லட்டும் – ஜெய்ராம் ரமேஷ் Read More »

இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டனர். …

இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Read More »

3வது முறை ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்ததாக மாறும் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம்போல் செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, தவறான பாதையில் மக்களை வழிநடத்தும் அரசியல் முறியடிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3வது முறை ஆட்சியில் இந்தியா …

3வது முறை ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்ததாக மாறும் – பிரதமர் மோடி Read More »

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – விஜய்

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார். சென்னை திருவான்மியூரில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு 2ம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள …

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – விஜய் Read More »

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து, கடந்த ஆட்சி காலங்களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளை தவறாக வழிநடத்தியது என்று குற்றம் சாட்டி பிரதமர் பேசியபோது, குறுக்கிட்டு பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர் கார்கே கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு …

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Read More »

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்

நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் நாளை விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் பேரின் எதிர்காலத்தை கருதி விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு உடனடி …

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் Read More »

தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது – பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அதில், தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியாக இருப்பதும் பெருமை தான் – ராகுல் காந்தி

மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் மக்களவையில் முதல் முறையாக விவாதத்தில் ராகுல்காந்தி பேசினார். அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். ராகுல்காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் முழுக்கம் எழுப்பியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜனதாவினர் உண்மையாக இந்துக்கள் அல்ல என்று ராகுல் கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.