Mnadu News

TOP TAMIL NEWS

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி முடங்கியுள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சியினரும் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தேசிய கீதம் அவமதிப்பு புகார் வழக்கு: மம்தாவை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு.

மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2021-ஆம் ஆண்டு மராட்டியத்தின் மும்பை நகரில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.இதையடுத்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கும்போது, அவர் முதலில் அமர்ந்து இருந்தும், அதன்பின் எழுந்து சென்று தேசிய கீதம் முழுமையாக இசைக்கப்படுவதற்கு முன் அதனை பாதியிலேயே நிறுத்தும்படி கூறி சென்றுவிட்டார்.இது குறித்து, மும்பை பா.ஜ.க. செயலாளர் விவேகானந்த் குப்தா, மும்பை போலீசில் …

தேசிய கீதம் அவமதிப்பு புகார் வழக்கு: மம்தாவை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு. Read More »

மாதத்துக்கு ரூ.452 கோடி இழப்பு: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.

2022 – 2023-ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 12 ஆயிரத்து 7 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்க மூலம் ஆனால், இந்த கால கட்டத்தில் 16 ஆயிரத்து 985 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் 4ஆயிரத்து 978 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 452 கோடியே 58 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக …

மாதத்துக்கு ரூ.452 கோடி இழப்பு: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல். Read More »

சென்னை குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள்:அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நீர்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடுசென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.88 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு …

சென்னை குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள்:அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு. Read More »

ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க வேண்டும்: கால்நடை துறைக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.

ஆவின் நிறுவன பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறையின் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களை மையப்படுத்தி ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள உயர்நீதிமன்றம் கிளை. ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்கப்படும் வரை அந்த கூட்டுறவு சங்கத்தால் யாரும் நியமிக்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

ஆற்றலில் சுயசார்பு அவசியம், உக்ரைன் போர் கற்று கொடுத்த பாடம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.

புதுடெல்லியில், மத்திய நிலக்கரி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட 7-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அளவில் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் உள்ளது. வரும் காலத்தில், நகரமயம் மற்றும் தொழில்மயம் என ஆக கூடிய சூழலில், மக்களுக்கு அதிகளவிலான வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் …

ஆற்றலில் சுயசார்பு அவசியம், உக்ரைன் போர் கற்று கொடுத்த பாடம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு. Read More »

கார்த்தி சிதம்பரத்துக்கு கை கொடுக்காமல் சென்ற ராகுல் காந்தி: வைரலாகும் வீடியோ.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி வந்திருந்தார். ராகுல் காந்தியின் வருகையின் போது அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்து இருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி ராகுல் காந்தி உள்ளே சென்றார். கடைசியில் நின்றிருந்த கார்த்தி சிதம்பரம் கை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விட்டார். கார்த்தி சிதம்பரம் அப்படியே உள்ளே செல்லாமல் கீழே இறங்கி வந்தார். அவரின் இந்த செயல் …

கார்த்தி சிதம்பரத்துக்கு கை கொடுக்காமல் சென்ற ராகுல் காந்தி: வைரலாகும் வீடியோ. Read More »

ரேஸ் கிளப் ரூ.730.86 கோடி வரி பாக்கி: ஒரு மாதத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை ரேஸ் கிளப்பின் வரி பாக்கி தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வரி பாக்கியை அரசுக்கு செலுத்த உத்தரவிட்டதுடன், சில பணக்காரர்களுக்கு ஒதுக்கிய 160 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போது நடக்கும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில்எங்களுக்கு கூட்டணி தேவையில்லை: காங்கிரஸ் அறிவிப்பு.

செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே. சிவக்குமார், ஒரே நாளில் தேர்தல் நடத்துவது என்ற அறிவிப்பை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி வரவேற்க விரும்புகிறது.மே 10-ந்தேதி ஓட்டு பதிவு நாளாக மட்டுமின்றி, ஊழல், 40% கமிஷன், ஊழலுக்கான மூலதனம் என எல்லாவற்றையும் வேரோடு ஒழிக்கும் நாளாக இருக்கும். எங்களுக்கு கூட்டணி எதுவும் தேவையில்லை. நாங்கள் சொந்தமாகவே வெற்றி பெறுவோம். தேர்தலில், 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியை பெறுவோம் என நான் எதிர்பார்க்கிறேன்.வருகிற 5-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவரான …

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில்எங்களுக்கு கூட்டணி தேவையில்லை: காங்கிரஸ் அறிவிப்பு. Read More »

வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு: மத்தியரசு தகவல்.

மக்களவை உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்செய் பாட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.