Mnadu News

தமிழ்நாடு

விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம் – சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், …

விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம் – சென்னை உயர்நீதிமன்றம் Read More »

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – விஜய்

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார். சென்னை திருவான்மியூரில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு 2ம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள …

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – விஜய் Read More »

நடிகர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்தார் சீமான்

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்துகின்ற விஜய்க்கு வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார். கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக அவர் பரிசுகளை வழங்குகிறார். முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் …

நடிகர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்தார் சீமான் Read More »

நாடு முழுவதும் ஒலிக்கும் நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் – முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்தின் போது நீட் முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் ஒருமனதாக …

நாடு முழுவதும் ஒலிக்கும் நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் – முதலமைச்சர் ஸ்டாலின் Read More »

தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்கியது. முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் தொடங்கிய மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அதன் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ”தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பதுபோல …

தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா Read More »

திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இன்றைய சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அதில், ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம்

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது. தனிநபரை தாக்கி பேசக் கூடாது, …

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் Read More »

சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் இபிஎஸ் மனு

விஷ சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது விஷ சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, ஆளுநரிடம் …

சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் இபிஎஸ் மனு Read More »

ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவர மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, 24-ந் தேதி (இன்று) முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேசுவரம் துறைமுக பகுதியில் நேற்று நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க சென்று கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளுடன் 22 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு படகு, 4 மீனவர்களை …

ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Read More »

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழந்தனர். ஒரு சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருசிலர் வீட்டிலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், விஷ சாராயம் குடித்து நேற்றுவரை 57 பேர் உயிரிழந்த நிலையில் பலி …

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு! Read More »