Mnadu News

தமிழ்நாடு

இளைஞர் உயிரிழந்த விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களில் ஹேமசந்திரன், பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். ஹேமராஜன், சித்தா பார்மசிஸ்ட் பணியில் …

இளைஞர் உயிரிழந்த விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு Read More »

சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்திய இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை: சென்னை விமான நிலையத்தில் தோகாவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் …

சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் Read More »

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. 9 மாவட்ட செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் வெற்றி …

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை Read More »

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 2வுக்கு விடைத்தாள் திருத்தம் பணி முடிந்து விட்டது. பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்புக்கு விடைத்தாள் மதிப்பீடு நடந்து வருகிறது. இந்நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து …

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை Read More »

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் …

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் Read More »

சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை – அதிர்ச்சி தகவல்

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 27 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. சென்னையில் அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 66.75 சதவீதமும், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 52.04 சதவீதமும் பதிவாகியுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது சென்னையில் …

சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை – அதிர்ச்சி தகவல் Read More »

த.வெ.க. தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

த.வெ.க. தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க …

த.வெ.க. தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! Read More »

தனது உடல்நிலை குறித்து ‘மன்சூர் அலிகான்’ பரபரப்பு அறிக்கை

தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, இறுதி கட்ட பிரசாரம் செய்ய குடியாத்தம் வந்த போது நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியாத்தத்தில் …

தனது உடல்நிலை குறித்து ‘மன்சூர் அலிகான்’ பரபரப்பு அறிக்கை Read More »

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்குள்பட்ட தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. பதற்றமான வாக்குச் …

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம் Read More »

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 950 வேட்பாளர்கள் …

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு Read More »