தேர்தல் களத்தில் மீண்டும் விஜயகாந்த் – விஜயபிரபாகரன்
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சிச் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது நாம் யார் என்பதை விஜயகாந்த் வழியில் காட்ட வேண்டும் எனவும் துரைமுருகன் தேமுதிகப் பற்றி கூறியதால் தேமுதிக மீதான திருஷ்டி கழிக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளுக்கு விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.