Mnadu News

உலகம்

ஸ்மோக் பிஸ்கட்டால் உயிர் போகும் அபாயம் – உணவுத்துறை எச்சரிக்கை

கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். மேலும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 …

ஸ்மோக் பிஸ்கட்டால் உயிர் போகும் அபாயம் – உணவுத்துறை எச்சரிக்கை Read More »

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர் இருப்பது கண்டறியப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து ரஷியாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் டன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது. இது ரஷியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக …

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை! Read More »

இந்தியா – ஜப்பான் இடையே ராணுவ கூட்டுப்பயிற்சி தொடக்கம்

இந்தியா – ஜப்பான் ராணுவம் இடையேயான வருடாந்திர கூட்டு ராணுவ ஒத்திகைப் பயிற்சி இன்று(பிப்.25) தொடங்கியது. ராஜஸ்தானின் மஹாஜன் மைதானத்தில் 2 வாரம் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில், இரு நாடுகளிருந்தும் 40 வீரர்கள் வீதம் மொத்தம் 80 வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்த ராணுவப் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற இந்த ஒத்திகைப் பயிற்சி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. இருநாடுகளிடையே …

இந்தியா – ஜப்பான் இடையே ராணுவ கூட்டுப்பயிற்சி தொடக்கம் Read More »

சீனாவில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி!

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. இதனால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதும் சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதம் உயர்ந்து …

சீனாவில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி! Read More »

ஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு; தென்கொரியா வேதனை!

தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் முழங்கியதாக கூறப்படும் நிலையில், தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு தென்கொரியா உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – 23 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!

பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 ஆயிரத்து …

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – 23 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை! Read More »

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 8 பேர் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதுடன், அவற்றில் விரிசல்களும் ஏற்பட்டன. சாலைகள், வீதிகள் இரண்டாக …

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 8 பேர் உயிரிழப்பு Read More »

3 பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை!

ரிக்டர் அளவுகோளில் 7.6 எனும் அளவில் வட மத்திய ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிறுவனம், இஷிகாவா, நிகாடா மற்றும் டொயாமா ஆகிய கடற்கரையோர பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக …

3 பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை! Read More »

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல், சிரியாவில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவரது ஆட்சிக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள் சிரியா, ஏமன், லெபனான் போன்ற …

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் Read More »

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழப்பு

சிங்கப்பூருக்கு செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து நேற்று அதிகாலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து உதவிகேட்டு சரக்கு கப்பல் கேப்டன் அமெரிக்க கடற்படைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் அமெரிக்க போர் கப்பல் விரைந்துள்ளது. அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்து, சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்கின. அமெரிக்க ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், ஹவுதி …

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழப்பு Read More »