Mnadu News

வணிகம்

படுமோசமான நிதி நிலை:திவாலானது அமெரிக்க ‘சிலிக்கான் வேலி’ வங்கி.

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கியின் படுமோசமான நிதி நிலையை அறிந்தனர்.அதையடுத்து, டெபாசிட்தாரர்கள் விரைந்து தங்களது பணத்தை எடுத்துக் கொண்டனர்.இதனால், சிலிக்கான் வேலி வங்கி திடீரென 48 மணி நேரத்தில் திவாலானது .அதையடுத்து, இந்த வங்கியின் முழுக் கட்டுப்பாட்டை அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கீழ் கொண்டு வரப்பட்டது.அதனால் வங்கியின் பங்கு வர்த்தகம் 70 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தது.

கடனை அடைக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகளை விற்கும் அதானி?

பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி, பங்குச் சந்தைகளில் கடும் சரிவைக் கண்டுவரும் அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று 3 ஆயிரத்து 700 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்வழங்குபவர்களிடம் அதானி முறையான கோரிக்கையை வைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேற்கோள்காட்டுகின்றன.

ரூ.7,374 கோடி கடனை திருப்பிச் செலுத்திய அதானி.

அதானி குழுமத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சிக்குப் பின், ஒட்டுமொத்த ஊக்குவிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஏப்ரல் 2025 இல் முதிர்ச்சி காலம் இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ. 7,374 கோடி (902 மில்லியன் டாலர்) பங்கு ஆதரவு நிதியுதவியை நாங்கள் திரும்ப செலுத்தியிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம் என அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதோடு மட்டுமல்லாமல், 2023ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் அனைத்து பங்கு ஆதரவுடன் மீதமுள்ள கடன்களையும் முன்கூட்டியே …

ரூ.7,374 கோடி கடனை திருப்பிச் செலுத்திய அதானி. Read More »

அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் உயர்வு: முதலீட்டார்கள் வியப்பு.

அதானி குழும நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளும் 2-வது நாளாக உயர்ந்துள்ளதால் முதலீட்டார்கள் வியப்படைந்துள்ளனர். அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 155 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 519 ரூபாய் 50 காசு ஆகவும் அதானி டிரான்ஸ்மிஷின் பங்கு 32 ரூபாய் உயர்ந்து 675 ரூபாய் ஆகவும் உள்ளது. அதானி டோட்டல் கேஸ் பங்குவிலை 22 ரூபாய் உயர்ந்து 701 ரூபாய் ஆகவும், அதனை வில்மர் பங்குவிலை 18 ரூபாய் அதிகரித்து 379 ரூபாய் 70 காசு ஆகவும் உள்ளது.அதனால் முதலீட்டார்கள் …

அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் உயர்வு: முதலீட்டார்கள் வியப்பு. Read More »

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தியாவில் அறிமுகமாகிய சிட்ரோன் மின்னணு கார்.

சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது புதிய இ-சி3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வாரம் முதல் புதிய ஐ-சி3 கார் டெலிவரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.25 நகரங்களில், நாடு முழுவதும் உள்ள 29 லா மைசன் சிட்ரோன் ஷோரூம்களிலும் இந்த கார் இனி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிட்ரோன் கார் 100 சதவிகித ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என …

இந்தியாவில் அறிமுகமாகிய சிட்ரோன் மின்னணு கார். Read More »

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.இந்நிலையில், பிப்ரவரி 25ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.5,210ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேசமயம், வெள்ளியின் விலையும் …

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. Read More »

டெல்லி, மும்பை ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்: எலான் மஸ்க் நடவடிக்கை.

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமார் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபர் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து பணியாளர்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது.கருத்துகளை நவீனமயமாக்கம் என்ற முறையில் அவரது நடவடிக்கைகள் வெறுப்பு கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் அதிகரிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.ஏற்கெனவே டிரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது …

டெல்லி, மும்பை ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்: எலான் மஸ்க் நடவடிக்கை. Read More »

மும்பை ஓர்லி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.240 கோடிக்கு வாங்கிய பி.கே.கோயங்கா.

மும்பை ஒர்லி பகுதியில் உள்ளஅன்னி பெசன்ட் சாலையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்று இந்த கோபுரங்கள் அழைக்கப்படுகின்றன. இதில் ஒரு கோபுரத்தின் அதாவது டவர்- பியில் 63, 64, 65 ஆகிய தளங்களில் ‘பென்ட்ஹவுஸ்’ என்றுஅழைக்கப்படும் உச்சிப் பகுதி குடியிருப்பு உள்ளது. இந்த பென்ட்ஹவுஸ்’ 240 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே. கோயங்கா இதனை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பென்ட்ஹவுஸ் 30 …

மும்பை ஓர்லி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.240 கோடிக்கு வாங்கிய பி.கே.கோயங்கா. Read More »

விரைவில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரம்.

மக்களிடையே சில்லறை புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்களில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நாடு முழுவதும் முதற்கட்டமாக 12 நகரங்களி, சில்லறை நாணயங்கள் மட்டுமே வழங்கும் இயந்திரங்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், சந்தைப் பகுதிகளில் வைக்கப்படவிருக்கின்றன. வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடான சில்லறை நாணயங்களை வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்படும்.இதில், வடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு …

விரைவில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரம். Read More »