Mnadu News

வணிகம்

ஐ டி ஆர் தாக்கல் செய்யும் தேதி நீடிப்பு! முழு விபரம் உள்ளே!

வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. யூனியன் பட்ஜெட் 2023-24 தரவின்படி, நடப்பு நிதியாண்டில் 33.61 லட்சம் கோடி ரூபாய் மொத்த வரி வரவுகளை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதில், பட்ஜெட் ஆவணங்களின்படி, கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரி வசூலிப்பதை விட, 10.5 சதவீதம் அதிகமாக, …

ஐ டி ஆர் தாக்கல் செய்யும் தேதி நீடிப்பு! முழு விபரம் உள்ளே! Read More »

பாதியாகக் குறைந்த டெக் மஹிந்திரா சிஇஓ ஊதியம்: ஆண்டு அறிக்கையில் தகவல்.

கடந்த நிதியாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில், தலைமை செயல் அதிகாரி சிபி குர்னானியின் சம்பளம் 32 கோடியாக குறைந்துள்ளது. இவர் சென்ற நிதியாண்டில் 63 கோடியே 40 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார். இந்த நிலைக்கு குர்னானியின் குறைந்த எண்ணிக்கையிலான பங்கு விருப்பங்களே இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.குர்னானி, பணியாளர் பங்கு விருப்பத் திட்டங்களில் கடந்த நிதியாண்டில் 25 கோடியே 60 லட்சம் ரூபாய் ஈட்டினார். குர்னானியின் ஊதியம் பாதியாக குறைந்தாலும், அது டெக் மஹிந்திரா …

பாதியாகக் குறைந்த டெக் மஹிந்திரா சிஇஓ ஊதியம்: ஆண்டு அறிக்கையில் தகவல். Read More »

ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணையும் ஹெச்டிஎப்சி நிறுவனம்: எச்.டி.எஃப்.சி தலைவர் தீபக் பரேக் அறிவிப்பு.

இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பரிவர்த்தனை என்று அழைக்கப்படும் எச்.டி.எஃப்.சி வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் மிகப்பெரிய வீட்டுக்கடன் நிறுவனத்தை கையகப்படுத்த ஒப்புக்கொண்டது.இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கியுடன் வீட்டுவசதி நிதி நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைப்பு வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று எச்.டி.எஃப்.சி தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். .இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது. …

ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணையும் ஹெச்டிஎப்சி நிறுவனம்: எச்.டி.எஃப்.சி தலைவர் தீபக் பரேக் அறிவிப்பு. Read More »

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாபஸ்சானது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி.

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 2 லட்சம் 41 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன. இதில், 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. ரெப்கோ வட்டி விகிதம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தற்போது பணவீக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளது …

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாபஸ்சானது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி. Read More »

ரூ.2 லட்சம் கோடியைக் கடந்த கடன் அட்டை நிலுவைத் தொகை: ரிசர்வ் வங்கி தகவல்.

ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, நாட்டில் முதன்முறையாக கடன் அட்டை நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.அதே சமயம், கடன் அட்டை நிலுவைத் தொகை அதிகரிப்பது என்பது மக்களின் திருப்பிச் செலுத்த முடியாத திவால் நிலையைக் காட்டவில்லை. மாறாக கடன் அட்டை வழியாக அவர்கள் செலுத்தும் கட்டணங்கள் அதிகரித்துள்ளதையும், பணவீக்கம் அதிகரித்துள்ளதையுமே பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்துள்ளது, அதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவிடும் வழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தனியார் வங்கிகள் …

ரூ.2 லட்சம் கோடியைக் கடந்த கடன் அட்டை நிலுவைத் தொகை: ரிசர்வ் வங்கி தகவல். Read More »

மொத்த விலை பணவீக்கம் மே மாதம் குறைந்தது: மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தகவல்.

.இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவாக 3 புள்ளி நான்கு எட்டு சதவீதமாக இருந்தது. இதன் காரணமாக உணவு, எரிசக்தி மற்றும் உற்பத்தி ஆகியவை எந்த விலையேற்றம் இல்hமல் சாதாரணமாக இருந்தது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து ரூ82.46 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் வெளிநாட்டு நிதியின் வருகை அதிகரிப்பு போன்றவை ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருந்தது என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அந்நியச் செலவணி சந்தையில் உள்நாட்டு அலகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர விற்பனையானது.ஆர்பிஐ-ன் இந்த அறிவிப்புச் சந்தைகளின் ஒட்டுமொத்த உணர்வுகளைத் தூண்டியது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதனிடையே, அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ள அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்து …

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து ரூ82.46 ஆக உள்ளது. Read More »

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த 6,7 ஆகிய தேதிகளில் நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி …

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு. Read More »

தேயிலை உற்பத்தி 20 கோடி கிலோவை எட்டும்: இலங்கை தேயிலை வாரியத் தலைவர் அறிவிப்பு.

இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அந்நாட்டின் தேயிலை வாரியத் தலைவர் நிராஜ் டி மெல், இலங்கையில் தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதால், இந்தாண்டு தேயிலை உற்பத்தியானது 20 கோடியே 65 லட்சம் கிலோவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.அதோடு,கடந்த ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 15 லட்சம்; கிலோ கிராம் அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அசாம் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மேம்படுத்த ரூ 600 கோடி முதலீடு : ஆயில்மேக்ஸ் எனர்ஜி முடிவு.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஆயில்மேக்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் கபில் கர்க்;, எங்களிடம் அஸ்ஸாமில் அம்குரி, துவர்மாரா மற்றும் திபுக் ஆகிய மூன்று இடங்களில் எண்ணெய் வயல்கள் உள்ளது. தற்போது, அம்குரி எண்ணெய் வயலில் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கன மீட்டர் எரிவாயும்; 500 பீப்பாய்கள் கச்சா எண்ணெயும் உற்பத்தி செயப்படு;கிறது. இந்த நிலையில், அசாமில் உள்ள எங்களது எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மேம்படுத்த 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய …

அசாம் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மேம்படுத்த ரூ 600 கோடி முதலீடு : ஆயில்மேக்ஸ் எனர்ஜி முடிவு. Read More »