Mnadu News

இந்தியா

தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் தீவிரம் அனல் பறக்கும் தேர்தல் களம்

தமிழ்நாட்டில் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் என்பதால் பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தவண்ணம் வருகின்றனர். அந்த வகையில் அதிமுக- வின் நாடாளுமன்ற தென்சென்னை தொகுதியின் வேட்பாளரான ஜெயவர்தன் தனது கட்சியினரோடும், ஏராளமான தொண்டர்களுடனும் ஆரவாரமாக அவரது வேட்பு மனுவை அடையாறில் தாக்கல் செய்தார் .   அடுத்தபடியாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரின் முன்பு …

தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் தீவிரம் அனல் பறக்கும் தேர்தல் களம் Read More »

பப்ஜி விளையாடியதால் உயிரழிந்த இளைஞன்

காலையில் எழுந்ததும் படிப்பு ,மாலையில் விளையாட்டு என்ற பாரதியார் பாடற்கேற்ப குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் தற்போது உள்ள நடைமுறையினர் இணையதளத்தில் மூழ்கியுள்ளனர் . அந்த வரிசையில் தற்போது உள்ள தலைமுறையினரால் இணையதளத்தில் விரும்பி விளையாடுகின்ற விளையாட்டு என்னவென்றால் அது பப்ஜி விளையாட்டு தான் . தெலுங்கானாவில் இந்த பப்ஜி விளையாட்டை 45 நாட்கள் தொடர்ந்து விளையாடியதில் சாகர் என்ற இளைஞரின் கழுத்துநரம்பு பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . மேலும் …

பப்ஜி விளையாடியதால் உயிரழிந்த இளைஞன் Read More »

பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்

இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் பாஜகவில் இணைவார் என்று சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது புரளியாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதை உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அருண் ஜெட்லி முன்னிலையில் கவுதம் கம்பீர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  

மீண்டும் இந்திய வீரரை சுட்டு கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

இந்த வருடம் நாட்டையே புரட்டி போட்ட சம்பவம் என்றால் புல்வாமா தாக்குதல்  என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளால் சுட்டும், மோட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், இன்று ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் …

மீண்டும் இந்திய வீரரை சுட்டு கொன்ற பாகிஸ்தான் ராணுவம் Read More »

ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியை முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் அமைத்து வருகிறது.  இதற்காக மாநிலக் கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்து வருகிறது. அந்தவகையில் டெல்லியில் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசி வந்தது. ஆம் ஆத்மி கேட்ட தொகுதிகளை காங்கிரஸ் தர மறுத்துவிட்டது. இதனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது …

ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி. Read More »

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி கைது.!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறிது நேரத்தில் அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வழக்கு முடிந்ததும் அவரை இந்தியா அழைத்து வருவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபடும். பஞ்சாபி நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன்பெற்ற நீரவ்  லண்டனில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Fugitive #NiravModi Arrested In LONDON. Big Diplomatic Win …

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி கைது.! Read More »

நாடாளுமன்றத்தில் அன்புமணியின் பங்களிப்பு சொல்ற அளவுக்கு இல்லை

திமுக கூட்டணியில் போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். மக்களவையில் எம்பிக்களின் செயல்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அன்புமணியின் வருகைப்பதிவேடு வெறும் 50 சதவிகிதத்திற்கு குறைவாகத் தான் இருக்கிறது. அப்படியே மக்களவைக்கு வந்தாலும் அவரது செயல்பாடு மிக மோசமாகவே கருதப்படுகிறது. முக்கியமான விவாதங்களிலும் ஓட்டுப்பதிவு நடக்கும் நேரங்களிலும் தமிழகத்திலேயே நேரத்தைக் கழித்துள்ளார் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ். ஏற்கனவே திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களின் ஏகோபித்த கோபத்தைப் பெற்ற அன்புமணி ராமதாசுக்கு இந்த …

நாடாளுமன்றத்தில் அன்புமணியின் பங்களிப்பு சொல்ற அளவுக்கு இல்லை Read More »

தக்க சமயத்தில் உதவிய முகேஷ் அம்பானி … அண்ணனுடைய பாசத்தில் உருகிய அனில் அம்பானி ;

  ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் ‘ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சகோதரனுக்கு ஒரு பிரச்சனை என்றால் துள்ளி கொதித்து முன் வந்து உதவும் உன்னத உறவு தான் சகோதர உறவு . இந்த பழமொழிக்கு ஏற்றபடி அரேங்கேறியுள்ள தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அனில் அம்பானி . உலகின் உள்ள மிகப்பெரிய கோடிஸ்வரில் ஒருவராக திகழும் அணில் அம்பானிக்கு கூட பண நெருக்கடி ஏற்பட்டது .ஸ்வீடனில் உள்ள எரிக்ஸன் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனர் வாங்கினர்.ஆனால் …

தக்க சமயத்தில் உதவிய முகேஷ் அம்பானி … அண்ணனுடைய பாசத்தில் உருகிய அனில் அம்பானி ; Read More »

ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிகச்சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்த வைகோ பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி கூட்டணி ,தொகுதிகள்,வேட்பாளர் பட்டியல் என காட்சிகள் அறிவித்து வருகின்றனர் .இந்நிலையில் திமுக தலைவரான ஸ்டாலின் அவர்கள் இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் . அந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக மத்திய அரசு அலுவலகங்ளில் தமிழ் மொழி இணைப்பு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும்  அறிவித்தார் . கல்விக்கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் . இந்நிலையில் சென்னனை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர் …

ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிகச்சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்த வைகோ பேட்டி Read More »

பிரியாணி சிக்கல்… செய்தியாளர்களைத் தாக்கி அமமுகவினர் அட்டகாசம்

காரைக்குடியில் அமமுகவினர்  தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழா நிகழ்வின் ஒரு பகுதியாக வந்த தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி வழங்கியதை காட்சிப் படுத்த முயன்ற போது தொண்டர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அமமுகவின் காரைக்குடி மாவட்டச் செயலாளர் செய்தியாளர்களை தாக்க முயன்ற செயலால் அங்கு பதட்டம் காணப்பட்டது. செய்தியாளர்களை நன்முறையில் நடத்துகிறார் என்று சமீப காலமாக பேசப்படும் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் மாவட்ட செயலாளர் செயலாளனது அமமுக கட்சிக்கு பெரிய …

பிரியாணி சிக்கல்… செய்தியாளர்களைத் தாக்கி அமமுகவினர் அட்டகாசம் Read More »