காபூல் கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலின் டேஷ்ட்-இ-பார்ச் பகுதியில் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் பயிலும் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ,அப்போது, திடீரென நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.