Mnadu News

TOP TAMIL NEWS

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை..! சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இதனைத்தொடர்ந்து நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது …

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை Read More »

மழை நிலவரத்தை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் …

மழை நிலவரத்தை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்! Read More »

விஜய் அட்லீ இணையும் படம்! இவ்வளவு கோடி செலவிலா? இணையத்தில் கசிந்த தகவல்!

தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான மூன்று படங்களுமே அடுத்தடுத்து விஜய்க்கும் சரி, அட்லீக்கும் சரி தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பெற்று தந்தது. வசூல் ரீதியாக மிக பெரிய அளவில் கல்லாகட்டிய இப்படங்கள் மூலம் அட்லீ டாப் ஐந்து இயக்குனர்கள் இடத்துக்கு சென்று விட்டார். தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிஸியாக உள்ளார். அதே நேரத்தில், அட்லீ ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் படு பிஸியாக உள்ளார். இதை முடித்த கையோடு …

விஜய் அட்லீ இணையும் படம்! இவ்வளவு கோடி செலவிலா? இணையத்தில் கசிந்த தகவல்! Read More »

ஈழ மக்களின் சுதந்திர விடுதலைகோரி உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கிய !
தியாகதீபம் திலீபன் நினைவு நாள்!!

தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு இறுதி நாள் நினைவேந்தல், இன்று காலை 10 மணியளவில் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் மிக உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. சுதந்திர விடுதலைகோரி தியாகதீபம் திலீபன் ஆகுதியான நினைவிடத்தில் 10.48 மணியளவில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.தியாகதீபம் திலீபனுக்கு பொதுச் சுடரினை, ஈழ யுத்தத்தில் இரண்டு கண்களும் இரண்டு கைகளையும் இழந்த முன்னாள் போராளி சேகரட்ணம் ராகவன் ஏற்றி வைத்துள்ளார். …

ஈழ மக்களின் சுதந்திர விடுதலைகோரி உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கிய !
தியாகதீபம் திலீபன் நினைவு நாள்!!
Read More »

ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் ஐபோன் 14

ஸ்ரீPபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14- இன்; உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் ஐபோன் 14 விலையில் மாற்றம் இருக்காது என்றும் பாகஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஒன்றுதிரண்ட பெருமளவு பௌத்தர்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிர்ப்பு!!

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி புத்தசாசன அமைச்சினை நோக்கி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தான் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான …

கொழும்பில் ஒன்றுதிரண்ட பெருமளவு பௌத்தர்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிர்ப்பு!! Read More »

AK 62 வில்லன் இவரா? ஆச்சரியத்தில் தல ஃபான்ஸ்!

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். AK 61 என்று பெயரிடப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், தற்போது படத்தின் பெயர் “துணிவு” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், அஜித் தமது அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்து விட்டார். அது தான் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் கதை விவாதம் மற்றும் ஸ்கிரிப்டிங் …

AK 62 வில்லன் இவரா? ஆச்சரியத்தில் தல ஃபான்ஸ்! Read More »

இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவக்கி உள்ள வாரிசு! விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு”. முதல் முறையாக நடிகைராஷ்மிகா மந்தனா இப்படத்தின் மூலம் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்கள். 2023 பொங்கலுக்கு வெளியிட தயாராகி வரும் படக்குழு இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …

இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவக்கி உள்ள வாரிசு! விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்! Read More »

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு அன்பு பரிசாக புல்லட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளார் இஷரி கணேஷ் கொடுத்துள்ளார். பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல பேட்டிகளில் ஏற்கனவே கூறிய நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என கெளதம் மேனன் உறுதி செய்துள்ளார். வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், …

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்! Read More »

“பொன்னியின் செல்வன்” குழுவை நெகிழ வைத்த இசை புயல்!

“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வரும் 30 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் முதல் அனைத்து பாடல்கள், டிரெய்லர் வரை அனைவரையும் கவர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது. எங்கெங்கும் இப்படத்தின் பாடல்கள் ஒலித்து வரும் நிலையில், இப்படத்தின் புரொமோஷன் பணிகள் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் குழு சென்று வருகிறது. அப்படி, சமீபத்தில் நடந்த …

“பொன்னியின் செல்வன்” குழுவை நெகிழ வைத்த இசை புயல்! Read More »